நடிகரின் 4வது மனைவி கண்ணீர் ;நடிகையின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாட்டம்

 

நடிகரின் 4வது மனைவி கண்ணீர் ;நடிகையின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாட்டம்

நடிகர் ஆதித்யன் ஜெயன், நடிகை அம்பிலி தேவியை 4வது திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கணவர்வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக அம்பிலி தேவி அளித்த புகாரின் பேரில் ஆதித்தியன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகரின் 4வது மனைவி கண்ணீர் ;நடிகையின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாட்டம்

அம்பிலி தேவி பிரபல மலையாள நடிகை. மம்முட்டியுடன் விஷ்வ துளசி படத்தில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். டிவி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். அப்படி டிவி தொடரில் நடித்து வந்தபோது சீதா என்ற தொடரில் தன்னுடன் நடித்த ஆதித்தியன் ஜெயனுடன் அம்புலி தேவிக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. அம்பிலி தேவி ஏற்கனவே முதல் கணவரை விவாகரத்து செய்தவர். ஆதித்தியன் இதற்கு முன்பு மூன்று முறை விவாகரத்து செய்தவர். இது தெரிந்தே இருவரும் காதலித்து வந்தனர்.

நடிகரின் 4வது மனைவி கண்ணீர் ;நடிகையின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாட்டம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பிலி தேவியை நாலாவது மனைவியாக ஏற்றுக் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் ஆதித்தியன் ஜெயன். இவர்களின் திருமணத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அம்புலி தேவியின் முதல் கணவர் இதை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

நடிகரின் 4வது மனைவி கண்ணீர் ;நடிகையின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்பிலி தேவிக்கும் ஆதித்யன் ஜெயனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. ஆதித்தியன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சொல்லி சொல்லி அம்புலி தேவி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமான ஆதித்யன் தனது கையில் நரம்பை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் ஆதித்தியன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக அம்பிலி தேவி போலீசில் கண்ணீருடன் புகார் அளித்திருந்தார். போலீசார் ஆத்தியம் ஜெயனை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.