கோவையில் ரவுடிகள் உட்பட 49 பேர் கைது – காவல் ஆணையர் அதிரடி!

 

கோவையில் ரவுடிகள் உட்பட 49 பேர் கைது – காவல் ஆணையர் அதிரடி!

கோவை

கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உள்ளிட்ட 49 பேரை, நேற்றிரவு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கைதுசெய்ய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, நேற்றிரவு மாநகரம் முழுவதும் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கோவையில் ரவுடிகள் உட்பட 49 பேர் கைது – காவல் ஆணையர் அதிரடி!

இதில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 17 பேரும், குற்றச்செயல்களில் தொடர்புடைய 32 ரவுடிகளையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்