48 மணிநேர பொய் குற்றச்சாட்டுகள்…’சங்கத்தமிழன்’ குறித்து வாய்திறந்த லிப்ரா புரொடக்ஷன்ஸ்
இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பணபிரச்னை காரணமாக தாமதமாக நேற்று மாலை வெளியானது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் படம் திரையிடப்பட்டு வருகிறது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக சங்கத் தமிழன் படத்தை தமிழில் வெளியிட இருந்த லிப்ரா நிறுவனத்திற்கு 11 கோடி ரூபாயை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் என செய்தி வெளியானது.
@LIBRAProduc clarification about #SangaThamizhan release issuse @VijaySethuOffl @VijayaProdn @RIAZtheboss @RaashiKhanna @NivethaPethura @onlynikil @behindwoods @galattadotcom @igtamil @cineulagam @AnandaVikatan @vikatan @sooriofficial @lightson_media pic.twitter.com/zWDH9vnOAB
— LIBRA Production (@LIBRAProduc) November 16, 2019
இந்நிலையில் லிப்ரா நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் படத்தை மிக பிரம்மாண்டமாக புரொமோட் செய்து 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுளோம். இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யலாம் என்று போராடிக் கொண்டிருந்த நிலையில் நெல்லையில் தடை, லிப்ராவுக்கு டெப்சிட், விஜய் சேதுபதியின் தீரா பிரச்னை என இண்டர்வியூ. இதனிடையில் எங்கள் நோக்கம் படத்தை வெளியிடுவது மட்டுமே. ஒருத்தங்க மேல ஈஸியா குற்றச்சாட்டு வைச்சிட்டு போலாம். அவங்களுக்கு காலம் பதில் சொல்லும். எங்கள் நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டு செல்வது மட்டும் தான். அதை லிப்ரா நிறுவனம் சரியாக செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளது.