47 ஆயிரம் பூத் கமிட்டிகள் ரெடி.. ஒருபுறம் நடிப்பு; மறுபுறம் அரசியல்!

 

47 ஆயிரம் பூத் கமிட்டிகள் ரெடி.. ஒருபுறம் நடிப்பு; மறுபுறம் அரசியல்!

ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான சீராய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு டாக்டர் இளவரசன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர்.

முதற்கட்டமாக, 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்துவிட்டதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 70 சதவிகித பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டி பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒருபுறம் திரைப்படம், சூட்டிங் என நடிகர் ரஜினி பிஸியாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் பிரவேசத்திற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், தலைவர் விரைவில் கட்சி பெயரை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர்.