ஒரே நாளில் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு

 

ஒரே நாளில் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு

தமிழகத்தில் இன்று மாலை 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், மதுரை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமனம், கோயம்புத்தூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் பி.ஜெயச்சந்திரன் கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஜி ஈஸ்வரன், மதுரை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம், சென்னை போலீஸ் அகாடமி நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் செல்வராஜ், கோவை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை எட்டாவது பிரிவு கமாண்டன்ட் எஸ்.ஆர்.செந்தில்குமார், கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம், சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல், திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு, திருச்சி நகரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மேற்குப் பிரிவு எஸ்.பி. மோகன்ராஜ், சேலம் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம், சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமனம், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், திருப்பூர் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ரவி, திருப்பூர் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமனம்

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன், நெல்லை மாவட்ட சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமனம், சென்னை, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. தில்லை நடராஜன் சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ஆக நியமனம், திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார், நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம், ஆவின் விஜிலன்ஸ் எஸ்.பி. ரோஹித்நாதன் ராஜகோபால், சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி. ஆக நியமனம்,கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு எஸ்.பி. ஆக நியமனம், திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் மயில்வாகனன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்குப் பிரிவு எஸ்.பி. ஆக நியமனம், சென்னை தலைமையிட ஏஐஜி வி.எஸ்.ஷியாமளாதேவி சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மத்தியப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.