“மருமகனை விட்டே மாமியாரை…” -பலாத்காரம் செய்த கூட்டத்தின் தந்திரம்

 

“மருமகனை விட்டே மாமியாரை…” -பலாத்காரம் செய்த கூட்டத்தின் தந்திரம்

தனது மருமகனோடு பைக்கில் சென்ற மாமியாரை இரண்டு சிறுவர்கள் உள்பட ஆறு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியை உலுக்கியுள்ளது .


ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு 45 வயதான பெண்ணொருவர் தன்னுடைய மருமகனுடன் செப்டம்பர் 14ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வரும்போது , அந்த இரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது .அவர்களை கண்டு பயந்து போன பைக்கை ஓட்டி வந்த அந்த பெண்ணின் மருமகன் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினார் .அப்போது அந்த வாலிபர் கும்பல் அந்த மருமகனை கட்டி போட்டுவிட்டு அந்த 45 வயது பெண்ணை பலாத்காரம் செய்தனர் .

“மருமகனை விட்டே மாமியாரை…” -பலாத்காரம் செய்த கூட்டத்தின் தந்திரம்


அந்த காட்சியை விடியோவும் பதிவு செய்தனர் .இந்த பெண்ணை பலாத்காரம் செய்த ஆறு பேரில் இரண்டு பேர் பள்ளி சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம் .பிறகு அந்த பெண் இந்த விவகாரத்தை போலீசில் புகாரளிக்காமல் இருக்க அவர்கள் அவரின் மருமகனை அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிப்பது போல் வீடீயோ எடுத்தனர் .பிறகு அவர்களை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர் .
இந்த பலாத்கார விவகாரத்தை அந்த பெண் போலீசில் புகாரளிக்காமல் இருந்தார் .ஆனால் அந்த பலாத்காரத்தை வீடியோ எடுத்த அந்த வாலிபர் கூட்டம் அந்த விடீயோவினை சமூக ஊடகத்தில் வைரலாக்கியது .இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் போலீசில் சென்று புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளில் மூன்று பேரை கைது செய்து விட்டனர் .மற்ற குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

“மருமகனை விட்டே மாமியாரை…” -பலாத்காரம் செய்த கூட்டத்தின் தந்திரம்