கொரானா வார்டில் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை -வெளிவந்த வார்டு பாய் லீலைகள் ..

 

கொரானா வார்டில் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை -வெளிவந்த வார்டு பாய் லீலைகள் ..

மும்பையில் அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்த அரசு மருத்துவமனையில் வார்டு பாய் வேலை செய்யும் 45 வயது நபரை போலீசார் கைது செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கொரானா வார்டில் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை -வெளிவந்த வார்டு பாய் லீலைகள் ..

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரானா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் 30 வயதான ஒரு பெண் பயிற்சி மருத்துவர் வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார் .அப்போது அதே மருத்துவமனையில் வார்டு பாய் வேலை செய்யும் 45 வயதான கஜேந்திர கோசாவி என்ற நபர் குடிபோதையில் அந்த பெண் டாக்டர் இருக்கும் அறைக்குள் நுழைந்துள்ளார் .பிறகு அந்த அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அந்த பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ,இதனால் அதிர்சியடைந்த அந்த பெண் டாக்டர் சத்தம் போட்டு கத்தியுள்ளார் .

கொரானா வார்டில் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை -வெளிவந்த வார்டு பாய் லீலைகள் ..அதனால் பயந்து போன வார்டு பாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .பிறகு நடந்த சம்பவத்தை அந்த பெண் பயிற்சி மருத்துவர் தன்னுடைய மேலதிகாரிகளிடம் கூறியுள்ளார் .அவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த வார்டு பாய் கஜேந்திர கோசாவி மீது போலீசில் புகார் தந்தனர் ,போலீசார் தீவிரமாக கஜேந்திர கோசாவியிணை பிடித்து விசாரித்த போது ,அவர் ஜூன் 20ம் தேதியும் ஒரு பெண் நோயாளியிடம் இது போல தவறாக நடக்க முயன்றுள்ள விஷயம் போலீசுக்கு தெரிந்து, அவர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ,அவரை கைது செய்துள்ளனர்