உடலில் மறைத்து 43 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!

 

உடலில் மறைத்து 43 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!

தினசரி தங்கத்தின் விலை ஏறி, இறங்குவதைப் படித்து வருகிறோம். அதேபோலவே தங்க கடத்தல் சம்பவங்களும் நடக்கின்றன. அதுவும் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

லாக்டெளன் காலத்தில் விமானப் போக்குவரத்தில் கடுமை காட்டப்பட்டாலும், கடத்தல்காரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதே இல்லை. மேலும், புதுப் புது டெக்னிக் மூலம் தங்கம், போதை மருந்து, வெளிநாட்டு கரன்ஸியைக் கடத்துவதைத் தொடர்ந்து வருகிறார்கள்.

உடலில் மறைத்து 43 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் தங்கள் கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டினார்கள்.

ஃபிளை துபாய் FZ 8517 விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த திருவெடத்து கனி,  புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உடலில் மறைத்து 43 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!

கனியைச் சோதனை செய்தபோது, ரூபாய் 28.75 லட்சம் மதிப்புடைய 565 கிராம் தங்க பசை கொண்ட நான்கு பொட்டலங்கள் அவரது உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார். நியாசை சோதனை செய்து பார்த்தபோது, ரூபாய் 15.17 லட்சம் மதிப்புடைய 298 கிராம் தங்க பசை கொண்ட நான்கு பொட்டலங்கள் அவரது உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

மொத்தம் ரூ 43.92 லட்சம் மதிப்புடைய 863 கிராம் 24 கேரட் தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விமானநிலையங்களில் கடுமையான கண்காணிப்புகளை மீறி கடத்தல் சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுவதும், அவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டன.