43வது சென்னை  புத்தகக் கண்காட்சி: 2 கோடி புத்தகங்களுடன் தொடங்கவுள்ளது!

 

43வது சென்னை  புத்தகக் கண்காட்சி:  2 கோடி புத்தகங்களுடன் தொடங்கவுள்ளது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியின்   சின்னம், தலைப்பு, ஹேஸ்டேக் ஆகியவை நேற்று வெளியிடப்பட்டது.

ஆண்டு தோறும் நடைபெறும்  சென்னை புத்தகக் கண்காட்சியானது இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ttn

43வது சென்னை  புத்தகக் கண்காட்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி தொடங்கவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியின்   சின்னம், தலைப்பு, ஹேஸ்டேக் ஆகியவை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

தினமும் மதியம் 3 மணி முதல் இரவு 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ள  இந்த கண்காட்சியானது சனி மற்றும் ஞாயிறு  போன்ற விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.  இதற்கான நுழைவுக்கட்டணம் ரூ. 10 ஆகும். இங்கு இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. அவர்களுக்கான அனுமதிச்சீட்டு கல்விநிறுவனங்களிடம் கொடுக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வந்தால், பயண அட்டையைக் காண்பித்து இலவச அனுமதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.