ஒரே நாளில் 4,209 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா!

 

ஒரே நாளில் 4,209 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா!

இந்தியாவில் ஒரேநாளில் 2,59,551 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஒரே நாளில் 4,209 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா!

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 2,59,551 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 2.67 லட்சம், நேற்று 2.76 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.59 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு2,54,96,330 லிருந்து 2,57,72,440 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24மணிநேரத்தில் 4,209 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஒரே நாளில் 4,209 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா!

இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,87,122 லிருந்து 2,91,331 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 2,23,55,440 லிருந்து 2,27,12,735ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 86.74% ஆக உள்ளது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.11%ஆக அதிகரித்துள்ளது.