சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

 

சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்புப் பணியில் பெறும் பங்காற்றி வரும் காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டுமே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆயுதப்படை,தீயணைப்பு, ரயில்வே ஊர்காவல் படை என 401 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.