கணவரை கட்டிப்போட்டனர் -தாயையும் ,மகளையும் கெடுத்தனர் -ஆறு ரௌடிகள் கூட்டு சேர்ந்து செய்த கொடுமை ..

 

கணவரை கட்டிப்போட்டனர் -தாயையும் ,மகளையும் கெடுத்தனர் -ஆறு ரௌடிகள் கூட்டு சேர்ந்து செய்த கொடுமை ..

மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஷாஹ்பூர் பகுதியில் ஒரு 40 வயது தாயையும் .அவரின் 15 வயது மகளையும் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து கற்பழித்த கொடுமை நடந்துள்ளது .அவரின் கணவரை அங்கேயே கட்டிப்போட்டு அவரின் கண்ணெதிரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது .

கணவரை கட்டிப்போட்டனர் -தாயையும் ,மகளையும் கெடுத்தனர் -ஆறு ரௌடிகள் கூட்டு சேர்ந்து செய்த கொடுமை ..

புர்ஹான்பூர் பகுதிக்கு சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குடும்பம் கல்லுடைக்கும் வேலைக்கு வந்துள்ளது ,அவர்கள் பகலில் கல்லுடைத்துவிட்டு இரவில் அந்த முகாமிலேயே தங்கி விடுவார்கள் .இதை பல நாள்கள் நோட்டமிட்ட சில ரௌடிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆறு பேர் சேர்ந்து கொண்டு கடுமையான ஆயுதங்களுடன் அங்கு வந்தனர் .அப்போது அங்கிருந்த அந்த பெண்ணின் கணவரை அடித்து கட்டிபோட்டுள்ளனர் .பிறகு அவர்கள் 40 வயதான பெண்ணையும் ,பிறகு அவரின் 15 வயதான மகளையும் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .இந்த சம்பவம் நடக்கும்போது அந்த பகுதியிலிருந்த மக்களில் சிலர் தடுக்க முற்பட்டபோது அவர்கள் மீதும் அந்த ரௌடிகள் தாக்கியுள்ளனர் .இதனால் மற்றவர்கள் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டனர் .
அந்த ரௌடிகள் போனதும் ஓடிவந்த சிலர் கணவரின் கட்டை அவிழ்த்து அவரை காப்பாற்றினார்கள் .பிறகு அனைவரும் ஒன்று கூடி அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் அந்த ரௌடிகள் மீது புகார் கூறினார்கள் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த ரௌடிகள் மீது வழக்கு பதிவு செய்து,பலாத்காரத்துக்குள்ளான தாயையும் ,மகளையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .கணவரை கட்டிப்போட்டனர் -தாயையும் ,மகளையும் கெடுத்தனர் -ஆறு ரௌடிகள் கூட்டு சேர்ந்து செய்த கொடுமை ..