ஊடகம் மூலம் உல்லாசத்துக்கு பெண்களை வளைக்க நினைத்த செக்யூரிட்டி- என்ன செஞ்சார் பாருங்க.
டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிக்கும் திலீப் குமார் என்ற 40 வயதான நபர் ஓர் பள்ளிக்கூடத்தில் செக்யுரிட்டியாக வேலை செய்கிறார் .அவர் சமுக ஊடகத்தில் தன்னை ராணுவ கேப்டன் என்று கூறிக்கொண்டு ,ராணுவ உடையணிந்து கொண்டு போட்டோ வைத்தார் .அந்த போட்டோவில் தன்னை கேப்டன் சேகர் என்று கூறினார் .
அதனால் அவரிடம் ஏராளமான பெண்கள் நட்பு கொண்டு பேசி வந்தார்கள் .இதை பயன்படுத்தி அவர் பெண்களை தன்னுடைய வலையில் விழ வைக்க திட்டமிட்டார்.இந்நிலையில் அவரிடம் ஒரு பெண் ஏமாந்தார் .அவரை அங்குள்ள ஜி கே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திக்க வர சொல்லியிருந்தார் .அந்தப்பெண்ணும் அவரை ராணுவ மேஜர் என்று நம்பி சந்திக்க ஒப்புக்கொண்டார் .இந்நிலையில் அந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகளை சிலர் தொடர்பு கொண்டு ,அந்த செக்யூரிட்டி செய்யும் மோசடி வேலை பற்றியும் ,அவர் ராணுவ மேஜர் என்று கூறி பெண்களை மோசடி செய்யும் விஷயத்தையும் கூறினர் .அதனால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க அவரை கண்காணித்தனர் .அப்போது அவரின் சமூக ஊடக கணக்கையும் பார்த்தனர் .அதன் பிறகு அவர் போலியான ராணுவ அதிகாரி அடையாள அட்டையுடன் பலரை ஏமாற்றும் விஷயத்தினை கண்டறிந்தனர் .அதான் பிறகு அவரை ஓரிடத்தில் வைத்து கைது செய்தார்கள் .அவரிடமிருந்து பல போலியான ராணுவ ஐடி கார்டுகளை கைப்பற்றினார்கள் .மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பல சர்வதேச வாட்ஸ்அப் குழுக்களில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. அவரது சர்வதேச தொடர்புகளை போலீசார் விசாரிக்கின்றனர். சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.