40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்தும் மதுரை ஆசிரியை: உலக சாதனைக்கு முயற்சி!

 

40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்தும் மதுரை ஆசிரியை: உலக சாதனைக்கு முயற்சி!

மதுரையை சேர்ந்த சுலைகா பானு என்ற ஆசிரியை உலக சாதனை படைப்பதற்காக 40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார்.

மதுரை: மதுரையை சேர்ந்த சுலைகா பானு என்ற ஆசிரியை உலக சாதனை படைப்பதற்காக 40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார்.

உலகின் தூய்மையான பணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ஆசிரியர் பணி. அதை உணர்த்தும் வகையில், பல சாதனை மனிதர்கள், தங்களின் இந்த வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தது ஆசிரியர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையில், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சுலைகா பானு என்பவர், ஆசிரியர் பணியில் பேர்சொல்லும்படியான சாதனை ஒன்றை செய்து முடிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி, பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு, இந்த சாதனை முயற்சியை சுலைகா பானு தொடங்கியுள்ளார். 27 ஆண்டுகளாக ஆசிரியை பணியில் இருக்கும் இவர், மாணவர்களுக்கு பிடித்த வகையில் 40 மணி நேரமாக பாடல்கள், ஆட்டம், நாடகம், தனி நடிப்பு போன்ற வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் உலக சாதனையை பதிவு செய்வதற்காக, ‘சாம்பியன் உலக சாதனை’ நிறுவனத்தில் இருந்து நடுவர்கள் வந்துள்ளனர்.