40 சவரன் நகை திருட்டு : கோவிலில் கைவரிசைக் காட்டிய கொள்ளையர்கள் !

 

40 சவரன் நகை திருட்டு : கோவிலில் கைவரிசைக் காட்டிய கொள்ளையர்கள் !

அரியலூர் மாவட்டம் மேலத் தெரு என்னும் பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

அரியலூர் மாவட்டம் மேலத் தெரு என்னும் பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வேலை பார்க்கும் பணிப்பெண் வழக்கம் போல இன்று கோவிலைச் சுத்தம் செய்ய வந்துள்ளார். அவர் வரும் போதே கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

Temple

அதனையடுத்து, உடனே அந்த கோவிலின் அர்ச்சகருக்குத் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அர்ச்சகர் கோவிலின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சாமி மீது அணிவிக்கப்பட்டிருந்த நகை,  பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகை மொத்தமாக 40 சவரன் நகையும் காணாமல் போகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர், கோவிலில் பூஜை நடந்ததால் அம்மனுக்கு நகையை அணிவித்ததன் பிறகு, அதனைக் கழட்டவில்லை என்று அர்ச்சகர் கூறியுள்ளார். 

Temple

இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். வீடுகள், கடைகளில் நடந்து வந்த திருட்டு தற்போது கோவில்களிலும் நடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.