4 ஆண்டுகள் குழந்தை இல்லை : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

 

4 ஆண்டுகள் குழந்தை இல்லை : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சுமித்ரா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 30 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பன்னீர்செல்வம் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த நான்காண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

4 ஆண்டுகள் குழந்தை இல்லை : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீர்த்தனாவை பார்க்க அவரது கணவர் பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அப்போது இருவரும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கணவன் -மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை சரமாரியாக அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .

4 ஆண்டுகள் குழந்தை இல்லை : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீர்த்தனாவை அவரது பெற்றோர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கீர்த்தனாவுக்கு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

4 ஆண்டுகள் குழந்தை இல்லை : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் கீர்த்தனாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது