ஸ்மார்ட்போன் வாங்க காசில்லை… கொள்ளையடிக்கக் கிளம்பிய சிறுவன்!

 

ஸ்மார்ட்போன் வாங்க காசில்லை… கொள்ளையடிக்கக் கிளம்பிய சிறுவன்!

14 வயது சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. தன்னுடைய நண்பர்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதைப் பார்த்த சிறுவன் தானும் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான். ஆனால் வாங்க காசில்லை. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி கொள்ளையடித்தல்.

ஜூன் 9 அன்று கபன் பார்க் காவல் நிலையத்தின் எல்லைப் பகுதிக்குள் மூன்று தொடர் கொள்ளைசம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில், சிறுவன் முதலில் விட்டல் மல்லையா சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகளுக்குள் நுழைந்தான். அந்த இரு கடைகளின் கல்லாவில் காசில்லாததால் ஏமாற்றமடைந்த சிறுவன் செயின்ட் மார்க்ஸ் சாலையில் அமைந்துள்ள மூன்றாவது கடைக்குள் நுழைந்தார். அங்கு அவனுக்கு ரூ .4,000 கிடைத்துள்ளது. பின்னர், லாவெல் சாலையில் அமைந்துள்ள நான்காவது கடைக்குள் நுழைத்த அவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. கடையில் 4 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்க காசில்லை… கொள்ளையடிக்கக் கிளம்பிய சிறுவன்!

தொடர் கொள்ளை தொடர்பான உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸ் விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். பின்னர் வீட்டிற்குச் சென்ற பார்த்த போது திருடியது 14 வயது சிறுவன் என்று தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாததே தன்னைத் திருடத்தூண்டியது என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.

நாளுக்கு நாள் அதிகரித்து அவரும் ஸ்மார்ட்போன் மோகம் இன்னும் என்னெவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ?