கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி!

தருமபுரி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரிய மாவடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது 4 வயது மகள் யோசிகா (4). இவர் நேற்று அதே பகுதியை சிறுமிகளுடன் வீட்டின் அருகே தனியார் விவசாய கிணற்று பகுதிக்கு சென்று விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி யோசிகா கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார்.

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகள், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர். அதன் பேரில், அவர்கள் உடனடியாக அரூர் தீயணைப்பு நியைம் மற்றும் கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள் சிறுமியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

பின்னர், கம்பைநல்லூர் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தந்தை பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.