கரூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து- இருவர் பலி!

 

கரூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து- இருவர் பலி!

கரூர்

கரூர் அருகே மினிவேன் உள்பட அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் பவித்திரம் அடுத்த வானவிழி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று முன்னால் சென்ற, மற்றொரு லாரியை முந்த முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்த மினிவேனின் மீது மோதிய லாரி, அதன் பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

கரூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து- இருவர் பலி!

இந்த விபத்தில் மினிவேனை ஓட்டிச்சென்ற நெடுஞ்கூரை சேர்ந்த செந்தில்குமார், இருசக்கர வாகனத்தில் வந்த பவித்ரம் பகுதியை சேர்ந்த ராமநாதன், கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார், ராமநாதன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.