இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் உயிரிழப்பு

 

இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் உயிரிழப்பு

ஜாவா தீவு: இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று பயிற்சியின்போது ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். மத்திய ஜாவா மாகாணத்தில் எம்ஐ-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. பறக்கும் பயிற்சிக்காக அப்போது அதில் வீரர்கள் பயணித்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கு முன்னர் அந்த ஹெலிகாப்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது நல்ல நிலையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை தெரியவில்லை.