தஞ்சை பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி – 4 பேர் கைது!

 

தஞ்சை பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி – 4 பேர் கைது!

தஞ்சை

தஞ்சை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்க முயன்ற சம்பவத்தில் 4 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

தஞ்சை மேல வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் ராகவன். இவரது நண்பர் ஒரத்தநாட்டை சேர்ந்த மாதேஸ்வரன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியன், காயமடைந்தவர்களின் விவரங்களை விசாரித்தபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தஞ்சை பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி – 4 பேர் கைது!

இதில், ஆத்திரமடைந்த ராகவனின் நண்பர்கள், நாற்காலிகளை வீசி பயிற்சி மருத்துவரை தாக்க முற்பட்டனர். பின்னர், அங்கிருந்து அனைவரும் தப்பியோடினர். இந்த சம்பவத்தை கண்டித்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியன் புகாரின் பேரில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவு அடிப்படையில் மருத்துவரை தாக்க முயன்ற ராகவன், மாதேஸ்வரன் மற்றும் அவர்களது நண்பர்கள் சந்துரு, ராக்கி என்கிற ராகவன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.