தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

 

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தூத்துக்குடி செக்காரக்குடியில் இன்று கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அங்கு தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் அந்த தொட்டியில் இருந்து விஷவாயு வெளியாகியுள்ளது. இதனை சுவாசித்த 4 தொழிலாளர்களும் அடுத்தடுத்து சுவாசித்து மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.