தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

 

தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக சென்னையில் இருந்து மக்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் தான் பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதுவரை அங்கு 702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் 163 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது.

தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

இந்த நிலையில், ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகரை சேர்ந்த 52 வயதான பெண் நீரிழிவு நோயால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடந்த 27 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.