மரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

 

மரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

பழனி அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், காரில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து உடுமலை நோக்கி அந்த கார் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வழியே இருந்த மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

தகவல் அறிந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடிக்கிறது.