“பெண்ணை கெடுத்து ,மிளகாய் பொடியை எடுத்து ……”கொடூரமான நிலையில் கிடந்த பெண்

 

“பெண்ணை கெடுத்து ,மிளகாய் பொடியை எடுத்து ……”கொடூரமான நிலையில் கிடந்த பெண்

60 வயதான பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து அவரை கொடுமை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

“பெண்ணை கெடுத்து ,மிளகாய் பொடியை எடுத்து ……”கொடூரமான நிலையில் கிடந்த பெண்


உத்தரபிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள கப்ராய் கிராமத்தில் வசிக்கும் சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா ஆகியோர் வசித்து வந்தனர் .அப்போது அவர்களின் வீட்டினருகே 60 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டினையும் ,நிலத்தையும் இந்த இருவரும் அபகரிக்க நினைத்தனர் .அதனால் அந்த வயதான பெண்ணின் வீட்டையும் நிலத்தையும் தங்களிடம் கொடுத்து விட்டு வெளியேறுமாறு பலமுறை மிரட்டி வந்தனர் .ஆனால் அந்த பெண் வெளியேறாமல் இருந்தார் .
அதனால் அந்த சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா இருவருடன் மேலும் இருவர் சேர்ந்து கொண்டு , அவர்கள் வீட்டின் அருகில் வசித்து வந்த 60 வயதான பெண்ணை கடந்த வாரம் சனிக்கிழமை அவர்கள் வயலுக்கு தூக்கி சென்றனர் .பின்னர் அந்த நால்வரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மிளகாய் பொடியை வைத்து தோய்த்து கொடுமை செய்தனர் .பிறகு மயக்க நிலையில் அவரை அங்கேயே வீசி விட்டு சென்றனர்
பிறகு வயலில் மயக்க நிலையில் காணப்பட்ட அந்த பெண்ணை , அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு காவல்துறையினர் அவரது அறிக்கையை பதிவு செய்ய மருத்துவமனைக்கு வந்தனர்.அப்போது அந்த பெண்ணின் புகாரின் படி அவரின் பக்கதது வீட்டு நபர்களான சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இருவரை தேடி வருகின்றனர் .