கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

 

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, மரியதாஸ் மகன் பிரதீப் அஸ்வின் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பிரதீப் அஸ்வின் மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் லிஸ்டன் மகன் லிபின், சிலுவை மகன் விதுல் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் பிராத்திப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.