தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி : ஓபிஎஸ் இரங்கல்!

 

தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி : ஓபிஎஸ் இரங்கல்!

தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி : ஓபிஎஸ் இரங்கல்!

தருமபுரி மாவட்டம் சேலம் – பெங்களூர் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சேலம் நோக்கி தொப்பூர் கணவாயின் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் விபத்துக்குள்ளானதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருக்கும் போது, அங்கு தாறுமாறாக வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அங்கிருந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நான்கு பேர் பலியானர். 15 வாகனங்கள் சேதமாகின.

தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி : ஓபிஎஸ் இரங்கல்!

இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமுற்றோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் ” என்று கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.