பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் மரணம்: ரூ.3 லட்சம் நிவாரணம்!

 

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் மரணம்: ரூ.3 லட்சம் நிவாரணம்!

தஞ்சை அருகே பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் மரணம்: ரூ.3 லட்சம் நிவாரணம்!

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, எதிர்பாராத விதமாக மின்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் மரணம்: ரூ.3 லட்சம் நிவாரணம்!

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணமும் வழங்க உத்தரவிட்ட முதல்வர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.