லடாக் தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்!

 

லடாக் தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி என்பவர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், தெலங்கானாவின் சூர்யபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்ததாகவும், லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் சண்டையிட்டதில் சீனா தரப்பில் 5 பேரும் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் அறிவித்தது.

லடாக் தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்!

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்த வீரர்களுள் 13 பேர் கடும் குளிரால் உயிரிழந்து விட்டதாகவும் இந்திய ராணுவத்தில் மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல சீன ராணுவத்தில் 43 உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோதலில் படுகாயம் அடைந்த 4 வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.