பணியிடத்தில் பலாத்காரத்துக்குள்ளான பெண் -சக ஊழியர்களிடம் சிக்கி சின்னாபின்னமானார்.

 

பணியிடத்தில் பலாத்காரத்துக்குள்ளான பெண் -சக ஊழியர்களிடம் சிக்கி சின்னாபின்னமானார்.

ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த நான்கு பேரால் அந்த ஆபிசில் பணியாற்றிய ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .

தெற்கு டெல்லியில் கிரேட்டர் கைலாஷில் உள்ள ஒரு அலுவலகத்தில் 14 வயது சிறுமி ஒருவர் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அந்த அலுவலகத்தில்
உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது டீனேஜ் வாலிபர் நண்பரானார் .இருவரும் ஒரே ஆபிசில் பணிபுரிந்து வந்ததால் நல்ல நண்பர்களாக பழகி வந்தார்கள் .இதற்கிடையே அந்த பெண் திடீரென அந்த ஆபிசிலிருந்து வேலையை விட்டு விலகினார் .அதனால் அந்த பெண்னின் ஆண் நண்பர் வருத்தமடைந்தார்
அதனால் அந்த பெண்னை அந்த ஆபீஸிற்கு கடந்த சனிக்கிழமையன்று பேச வருமாறு கூறினார் .அதை நம்பிய அந்த பெண் அந்த ஆபீஸிற்கு சென்றார் .அப்போது அவரோடு சிவம், ஹரிசங்கர் மற்றும் மங்கேஷ் என்ற மூன்று பேர் இருந்தார்கள் .அப்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை அந்த ஆபீஸிலேயே பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பின்னர் அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து போலீசில் அந்த நால்வர் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நான்கு குற்றவாளிகளை தேடி வந்தார்கள் .பின்னர் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தார்கள் .பின்னர் அவர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைத்தார்கள்

பணியிடத்தில் பலாத்காரத்துக்குள்ளான பெண் -சக ஊழியர்களிடம் சிக்கி சின்னாபின்னமானார்.