தரங்கம்பாடியை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

 

தரங்கம்பாடியை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நாகை

இலங்கை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தரங்கம்பாடியை சேர்ந்த 4 மீனவர்களை, அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர். நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து பாண்டியன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 7ஆம் தேதி தரங்கம்பாடியை சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை, ராஜ் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும், படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதனை தொடர்ந்து, சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்..