ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி… அடுக்குமாடி குடியிருப்புக்கு பூமிபூஜை பந்தல் அமைத்தபோது சோகம்…

 

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி… அடுக்குமாடி குடியிருப்புக்கு பூமிபூஜை பந்தல் அமைத்தபோது சோகம்…

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பூமிபூஜை பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி, 4 தொழிலளர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி என்னும் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கக பூமிபூஜை பந்தல் அமைக்கம் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கு, பந்தல் மேடைக்கு அருகே சுற்றுச்சுவரின் அருகிலேயே மின் கம்பங்கள் இருந்துள்ளது.

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி… அடுக்குமாடி குடியிருப்புக்கு பூமிபூஜை பந்தல் அமைத்தபோது சோகம்…

இதனை கவனிக்காத தொழிலாளர்கள் பந்தலுக்கான இரும்பு கம்பியை ஊண்டியபோது, கம்பி முனை மின்ஒயரில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில், ஆகாஷ் (30), மகாதேவ் (35), விசாகாந்தா, விஜய் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.