கூவத்தூர் அருகே பேருந்துகள் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

 

கூவத்தூர் அருகே பேருந்துகள் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

கூவத்தூர் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியான நிலையில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். காத்தான்கடை என்ற இடத்தில் விபத்து, காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூவத்தூர் அருகே பேருந்துகள் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

விபத்தில் அரசு பேருந்தின் வலது புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சேதமடைந்தன. விபத்தில் காயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விபத்து குறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.