கந்த சஷ்டி விவகாரம்: கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

 

கந்த சஷ்டி விவகாரம்: கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி விவகாரம்: கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.