4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம்!

 

4 மாநகராட்சி  ஆணையர்கள்  பணியிட மாற்றம்!

தஞ்சை, திருச்சி, ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4 மாநகராட்சி  ஆணையர்கள்  பணியிட மாற்றம்!

தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிரடியாக ஐபிஎஸ் ,காவல் ஆய்வாளர் ,ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

4 மாநகராட்சி  ஆணையர்கள்  பணியிட மாற்றம்!

இந்த சூழலில் தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ,திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.ஆவடி மாநகராட்சி ஆணையராக கே சிவகுமார் , தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.