சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழப்பு!

 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்  4 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ள நிலையில் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 6,304 பேர் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டுமே 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்  4 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது நபரும், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது நபரும், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 2 முதியவர்களும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.