‘நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி’..தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்!

 

‘நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி’..தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சிறுவர்கள் அர்ஜுன்(13), விஷால் (13), அருண் (11), கணேஷ்(12) மற்றும் பிரவீன் (12) தனது பெற்றோர்களுடன் நேற்று, நாராயணப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்த்யா என்னும் குக்கிராமத்துக்கு சென்றுள்ளனர். சிறுவர்களின் தாத்தா ராமுலு நாயக்(65) கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

‘நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி’..தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்!

அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இப்பகுதிக்கு வந்த சிறுவர்கள், சடங்குகள் முடிந்த பிறகு குடும்பத்துடன் அப்பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத சிறுவர்கள் 5 பேரும் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போரடிக் கொண்டிருந்த விஷாலை மட்டும் உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

‘நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி’..தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்!

தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த மற்ற 4 சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த சிறுவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.