‘7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை’ – 4 சிறுவர்கள் கைது!

 

‘7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை’ – 4 சிறுவர்கள் கைது!

சீர்காழி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை’ – 4 சிறுவர்கள் கைது!

மயிலாடுதுறை, சீர்காழி அருகே வசித்து வரும் 7 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி நெடுநேரம் ஆகியும் வீட்டுக்குள் உள்ளே வராததால் குழப்பம் அடைந்த பெற்றோர், வெளியே சிறுமி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டிற்கு அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

‘7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை’ – 4 சிறுவர்கள் கைது!

இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். கைதான சிறுவர்களிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.