திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் திமுக பிரமுகர் சின்னப்பன் திவ்யராஜ் என்ற அருண், மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, திண்டுக்கல் மாநகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த ஜார்ஜ் மற்றும் சபரிகாந்தன், பிரான்சிஸ், செல்வகுமார் ஆகியோரை கைதுசெய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா ஆட்சியருக்கு பரிந்துரையின் பேரில், ஜார்ஜ் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இன்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.