கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

 

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

கோவை

கோவையில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை மாவட்டம கருமத்தம்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளில் கொள்ளை மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனையடுத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

இந்த நிலையில் இன்று காலை அவிநாசி சாலையில் சென்னியாண்டவர் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச்சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனு (20), சுப்பாராவ் (20), அங்கம்மா ராவ் (32) மற்றும் அவரது மனைவி அங்கம்மா (28) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் கருமத்தம்பட்டி சின்னமோப்பிரி பாளையத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர் யுவராஜ் என்பவரின் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும், அரசு ஊழியர் நாகமணி என்பவரிடம் 6 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

அத்துடன், நேற்று முன்தினம் சூலூரில் கைதான 4 கொள்ளையர்களுடன், அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் வெளியானது. இதனையடுத்து, 4 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்