பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது – வட்டாட்சியர் அதிரடி

 

பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது – வட்டாட்சியர் அதிரடி

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் இரவுநேரங்களில் அனுமதியின்றி பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்தில், ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது – வட்டாட்சியர் அதிரடி

அப்போது மர்மநபர்கள் 4 வாகனங்களில் மணலை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனைடுத்து அந்த வண்டிகளை மடக்கிபிடித்த அதிகாரிகள், இதுதொடர்பாக, பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, ராஜேஷ், குமரன் மற்றும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் ஆகிய 4 பேரை கைதுசெய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்