மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை விற்பனை : 4 பேர் கைது!

 

மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை விற்பனை : 4 பேர் கைது!

கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும், இந்த குறிப்பிட்ட காலத்தில் பல குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை விற்பனை : 4 பேர் கைது!

கஞ்சா விற்பனை, குட்காவை கள்ளசந்தையில் விற்பது என பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களை போலீசார் ஆங்காங்கே கைது செய்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை விற்பனை : 4 பேர் கைது!

இந்நிலையில் மதுரை கரிமேட்டில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்று வந்த மெடிக்கல் கடை உரிமையாளர் பிரவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி வந்த பிரதீப்குமா,ர் பாலமுருகன், ராம்குமாரும் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.