குவாரி உரிமையாளரிடம் மாமூல்கேட்டு மிரட்டல்- பாமக நிர்வாகி உள்பட 4 பேர் கைது

 

குவாரி உரிமையாளரிடம் மாமூல்கேட்டு மிரட்டல்- பாமக நிர்வாகி உள்பட 4 பேர் கைது

மதுரை

வாடிப்பட்டியில் தனியார் கல்குவாரியில் கத்தியைக்காட்டி பணம் பறிக்க முயன்றதாக, பாமக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு வந்த பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர். மேலும், அங்கு பணிபுரியும் லாரி ஓட்டுநர் ஒருவரை தாக்கி 7 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் குவாரி ஊழியர்களுக்கும், நவீன்குமார் தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

குவாரி உரிமையாளரிடம் மாமூல்கேட்டு மிரட்டல்- பாமக நிர்வாகி உள்பட 4 பேர் கைது

இதுகுறித்து குவாரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி காவல்நிலைய போலீசார், அங்கு தகராறில் ஈடுபட்ட நவீன்குமார், கார்த்தி, சீனி மற்றும் சசி ஆகியோரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.