சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய, மூவர் கைது!

 

சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய, மூவர் கைது!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே யூரியா கலந்து உப்பு தண்ணீரை வைத்து கடமானை வேட்டையாடிய 3 பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வடவள்ளி வனப்பகுதி அருகேயுள்ள செம்மன்குட்டை என்ற இடத்தில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதிக்குள் 5 பேர் சுற்றித் திரிந்ததை கண்ட அதிகாரிகள், அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பியோடிய நிலையில், பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய, மூவர் கைது!

விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராமபைலூர் தொட்டியை சேர்ந்த ரங்கசாமி, நாராயணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பழனிசாமி என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, குழிகளுக்குள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உப்பு கலந்த தண்ணீரை ஊற்றி, கடமானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து வேட்டையாடிய கடமான் உடலையும், 2 கத்திகளையும் கைப்பற்றிய வனத்துறையினர், மூவரையும் கைதுசெய்தனர். மேலும், தப்பியோடிய சதீஷ், மூர்த்தி ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.