4.5 கோடி மோசடி… கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி புகார்

 

4.5 கோடி மோசடி… கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி புகார்

தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 ரூபாய் கோடி கடன் வாங்கியுள்ளதாக தொழில் கூட்டாளி மீது கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 ரூபாய் கோடி கடன் வாங்கியுள்ளதாக தொழில் கூட்டாளி மீது கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இவருடைய மனைவி ஆர்த்தி டெல்லியில் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். 

நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள 8 பேர், தமது கையெழுத்தை போலியாக போட்டு, நிறுவனம் ஒன்றிடம் இருந்து 4.5 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளதாகவும், கடனை திருப்பிக் கொடுக்காமல் என்னை அந்த வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.  இந்த கடன் வாங்கியது தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளாஅர். இதையடுத்து டெல்லி போலீசார், இந்திய குற்றவியல் சட்டம் 420, 468, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.