4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 13 வயது சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 13 வயது சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

நான்கு  வயது சிறுமிக்கு 13 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப்:  நான்கு  வயது சிறுமிக்கு 13 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன், பக்கத்து வீட்டில் வசித்த 4 வயது சிறுமியை விளையாட அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

child abuse

இதையடுத்து சிறுமியை  வெகுநேரமாகக் காணவில்லை  என்பதால் அவளின் தாயார் சிறுமியை தேடி சென்ற போது, சிறுவன் அவனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவன் பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல அவனை ஹரியானாவில் உள்ள டப்வாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

pocso

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சிறுவன் மீது சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில்,  சிறுவனை   போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி   பகிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.