4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் !

 

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் !

தந்தையே மகளை வன்கொடுமை செய்வதும், பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வதும் என ஒவ்வொரு நாளும் நடக்கும் கோரமான கொடுமைகள் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனதைப் பதைபதைக்க வைக்கின்றன.

சமீப காலமாகக் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான பாலியல்  வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தந்தையே மகளை வன்கொடுமை செய்வதும், பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வதும் என ஒவ்வொரு நாளும் நடக்கும் கோரமான கொடுமைகள் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனதைப் பதைபதைக்க வைக்கின்றன. இவை அனைத்திற்கும் சரியான தண்டனை வழங்கப்படாதது தான் காரணம் என்று மக்கள் ஒரு புறம் கருத்து தெரிவித்து வருகையில், மறுபுறம் பாலியல் வன்கொடுமை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 4 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த 68 வயதான காம கொடூரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ttn

சென்னையை அடுத்த போரூர் அம்பாள் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர்  ஜெகன்நாதராவ். இவருக்கு வயது 68. இவர் வீட்டின் அருகே உள்ள 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமி அவளது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூவிருந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஜெகன்நாதராவ்வை கைது செய்த காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.