4-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

 

4-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும்ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில்இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா தரப்பில் 3-வது டெஸ்டில் விளையாடிய அணியே மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இந்த போட்டியிலும் களம் இறங்குகிறது.