4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

 

4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. 

tt

இந்தியாவில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700லிருந்து 23,077 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா உறுதியாகி 37 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. 

tt

இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது.  குழந்தைக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று காலை பலியாகியுள்ளது.  கடந்த 3 மாதங்களாக குழந்தைக்கு  இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது வந்ததாக தெரிகிறது. 

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியபட்ட கேரள மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நேற்று அறிவித்த பினராயி விஜயன்,  மருத்துவமனையில் 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.