‘4 பெண்களை காதலிப்பது பேரு தான் காதலா?’ கவினிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட கஸ்தூரி 

 

‘4 பெண்களை காதலிப்பது பேரு தான் காதலா?’ கவினிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட கஸ்தூரி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 46 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ரேஷ் மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து 10பேருடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து சென்றது . 

நேற்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். அவரின் வருகை சில பேருக்கு அதிர்ச்சியாகவும் சில பேருக்கு சந்தோஷையும் ஏற்படுத்தியது. வந்த முதல் நாளே சில பேரை டார்கெட் செய்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கஸ்தூரி, கவினிடம், ‘ஒரே சமயத்தில் நான்கு பெண்களைக் காதலிப்பது காமெடி’னு உங்களுக்குத் தோன்றி இருக்கு’ல. வடிவேலு மாறி நானும் பிளே பாய் தான்…  நானும் பிளே பாய் தான்… என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்தார். 

அதற்கு பதிலளித்த கவின், ‘எப்படியோ வடிவேலு அளவிற்காவது வந்து இருக்கே’ என்றார். உடனே கஸ்தூரி, ‘இதே போன்று ஒரு பெண், ஜொல்லு அடித்து கொண்டு இருந்தால் அது நகைச்சுவையாக இருக்குமா? என்று வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் கவினிடம் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் கவினின் முகம் மிகவும் சுருங்கிவிடுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று போர் அடிப்பது போல் சென்று கொண்டு இருந்தது. தற்போது கஸ்தூரி என்ட்ரி கொடுத்து மீண்டும் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.